இந்திரனே காப்பாய்!

இந்திரனே காப்பாய்!

இறைஞ்சினோம் மழை வேண்டி
இரங்கிய ஆண்டவனும்
இடி இடித்து சொரிகின்றான்.

இலைகள் அசையாதிருக்க
இல்லிடம் ஒழுக
இரவு பகல் கண்விழிப்பு.

இருப்பிடத்தில் நீர்
இக்கணமே அகதி
இருள் சூழ்ந்த வாழ்க்கை.

இக்காலமும் விவசாயம்
இட்ட முதலும் மண்ணோடு
இதயமும் வலுவிழக்க

இப்போது வேண்டாம்
இம்மழை போதும்
இந்திரனே காப்பாய்.

05.12.2019

கருத்துகள் இல்லை