வெறிச்சோடி கிடக்கு

###வெறிச்சோடி கிடக்கு##........

வானமும்
வயலும்
வீதியும்
வெறிச்சோடி கிடக்கு.

வாகன இரைச்சலும்
சன நெரிசலும்
மக்களின் கூக்குரலும்
அடங்கி கிடக்கு.

வெளியே போனா
கைது செய்வான்
ஆடி ஓடின கால்கள்
முடங்கி கிடக்கு.

ஊரடங்கு
அறிவித்தல்தான்
உடலை காக்கும்
என்று கிடக்கு.

சட்டம்
இறுக்கமானதால்
சனங்களும்
வீட்டில் கிடக்கு.

கொலைகாரன் நேரிலில்லை
சண்டையிட
மக்கள் 
மண்டியிட்டு கிடக்கு

கடைகளுக்கும் பூட்டு
கால்களுக்கும் பூட்டு
வாய்களுக்கும் பூட்டு
மானிடம் மருத்துப்போய் கிடக்கு.

தளர்ந்து விட்டால்
சந்தி,  கந்தில்
சனமும்,  சடலமும்
குமிந்து கிடக்கும்!!!!

கருத்துகள் இல்லை