ஊனமுள்ள பிறப்புக்கள்

மாடென்றும் ஏச்சி
மந்தையென்றும் பேச்சு
நாய் என்றும் திட்டு
குரங்கென்றும் சொல்கிறார்கள்
கழுதையென்றும் கூறுகிறார்கள்

ஏசியவன்,  பேசியவன்
திட்டியவன்,  பாய்ந்தவன்
சொல்கிறவன்,  கூறுகிறவன்
அவன் எவனோ?

மாடென்றால் செல்வம்
நாய் என்றால் நன்றியுள்ளது
குரங்கு என்றால் மனித பிறப்பின் ஆரம்பம்
கழுதை சுமக்கும் உருவம்

இத்தனை நல்லது தெரிந்தும்
அத்தனையும் மறந்து
உதவாத விடயத்தை
உதாரணம் காட்டி
உதவாக்கரையாக்கும்
உயிரற்ற உடம்புகளே
ஊனமுள்ள பிறப்புக்கள்

கருத்துகள் இல்லை