தான்தோன்றி அப்பன் தானிருக்கான்

#தான்தோன்றி அப்பன்
தானிருக்கான்

தான்தோன்றி அப்பன்
தானிருக்கான்

வெள்ளையனை விரசிட்ட
வரலாறும் இவருக்குண்டு

நஞ்சுண்ட கண்டனவன்
நஞ்சை காக்கும் தேவன் அவன்

தினந்தோறும் அடியார் கூட்டம்
அவர் கோயில் கூடும்

தினப்பூசை கண்டாலே
வாழ்வு சிறப்புறும்

துட்டணை  தூரே
துரத்திடுவான்

தீர்த்தத்தாலே பயிரை காக்கும்
சிறப்பும் வாய்ந்தவன்

ஒளியினாலே உயிரைக்காக்கும்
சுயம்பானவன்

வரட்சிகள் வந்தாலும்
வெள்ளம் சூழ்ந்தாலும்
கொள்ளைநோய் கூடினாலும்
அப்பனவன் தான்தோன்றி
அப்பனவன் இருக்கின்றான்.

சாமிதான் காப்பார்
படுவான்கரை
சனம் சொல்லும் செய்தி!

கருத்துகள் இல்லை