எம்மூரில் நாம் வாழ........... .

எம்மூரில் நாம் வாழ........... .

எம்மூரில் நாம் வாழ
எம்மை சிதைத்து நின்றாய் - இப்போ
நும் வீட்டு சிறையில் வாழ்கின்றாய்
நாம் உலகையாளும் உயிரினங்கள்..



வலை கொண்டு வந்தாய்
குலை நடுங்கியது
படகில் பயணித்தாய்
படபடத்தது
அம்மையும் பறித்தாய்
தம்பியையும் அழித்தாய்
கரையில் சுற்றிய எம்மை
தரையில் எறிந்தாய்
தூண்டில் போட்டாய்
மண்டி இட்டோம்.

எம்மூரில் நாம் வாழ
எம்மை சிதைத்து நின்றாய் - இப்போ
நும் வீட்டு சிறையில் வாழ்கின்றாய்
நாம் நீரினையாளும் நீரினங்கள்.....

வட்டமிட்டால்
கட்டமிடுவாய்
கந்தில் நின்றால்
பந்து எறிவாய்
வீதிக்கு வந்தால்
சதி செய்வாய்
உணவு உண்டால்
பிணமாக்கிடுவாய்
வாய்விட்டு சிரித்தால்
மாய்த்திடுவாய்.

எம்மூரில் நாம் வாழ
எம்மை சிதைத்து நின்றாய் - இப்போ
நும் வீட்டு சிறையில் வாழ்கின்றாய்
நாம் சிறகடித்தாளும் பறவைகள்.. ..

கூட்டமாய் வாழ்ந்தோம்
வாட்டமாக்கினாய்
ஓடி விளையாடினோம்
அடித்து குதறினாய்
வழியில் சென்றோம்
அழித்து ஆரவாரித்தாய்
படுக்கையில் இருந்தோம்
மடுவில் வீழ்த்தினாய்
எம்மை மறந்திருந்தோம்
அம்பு விட்டாய்

எம்மூரில் நாம் வாழ
எம்மை சிதைத்து நின்றாய் - இப்போ
நும் வீட்டு சிறையில் வாழ்கின்றாய்
நாம் கானாளும் மிருகங்கள் ..

கருத்துகள் இல்லை